செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பங்குனி மாத பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

07:04 AM Mar 15, 2025 IST | Ramamoorthy S

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பங்குனி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறவிருக்கிறது.

மேலும், வரும் 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படவுள்ளது.

Advertisement

இந்தநிலையில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு வந்த பின், வழக்கமான மேம்பாலம் வழியாக செல்லாமல், கொடிமரத்தில் இருந்து நேரடியாக கோயில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்ல திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய வசதிகளை செய்துள்ளது.

Advertisement
Tags :
Athazha pujaDevasam BoardFEATUREDirumudiMAINPanguni month pujasabarimalaSabarimala Ayyappa temple openedSabarimala Ayyappan temple!Sabarimala devotees
Advertisement
Next Article