செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பல்லடம் மூவர் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

07:47 AM Mar 22, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கியது.

Advertisement

சேமலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 14 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய போதும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது.

இதனால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ தேவி தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் முதற்கட்டமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement
Tags :
CBCID policeCBCID police enquiryMAINPalladam three murder case
Advertisement