பிரதமர் மோடியின் இலங்கை பயணம் : 14 தமிழக மீனவர்கள் 14 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!!
05:00 PM Apr 06, 2025 IST
|
Murugesan M
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது. 3 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார்.
Advertisement
கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகேவை பிரதமர் மோடி சந்தித்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோள் மற்றும் வலியுறுத்தலை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுவித்தது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement