புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்காக அர்ப்பணிக்கவுள்ளார்.
Advertisement
ராமேஸ்வரத்திற்கு நாளை பகல் 12 மணிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தைப் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைக்கவுள்ள அவர், வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை வழித்தடத்தில் அமையவிருக்கும் 4 வழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் சோழபுரம் - தஞ்சாவூர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ள பிரதமர் மோடி, கடலூர் பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கவுள்ளார்.