புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியல்!
12:00 PM Mar 27, 2025 IST
|
Murugesan M
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
Advertisement
புதுப்பேட்டைப் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதில் 50க்கும் மேற்பட்ட காளைகளைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த காளை உரிமையாளர்கள் மல்லப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
Advertisement
Advertisement