செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மங்களூரு வங்கியில் 15 கிலோ நகைகள் கொள்ளை - நெல்லை அருகே மீட்பு!

07:30 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மங்களூருவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கர்நாடகா சிறப்பு படையினர் மீட்டனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் மங்களூருவில் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடித்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி ஜோசுவா மற்றும் கண்ணன் மணி ஆகியோரை கர்நாடகா சிறப்பு படையினர் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், களக்காடு பத்ம நேரி பகுதியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.

Advertisement

மேலும், நகைகளை பதுக்கி வைத்திருந்ததாக முருகாண்டியின் தந்தை சண்முக சுந்தரத்தை கர்நாடகா சிறப்பு படையினர் கைது செய்தனர்.

Advertisement
Tags :
MAINtirunelveliKarnataka Special ForcesMangaluru bank jewels theftKalakkadu15 kg of gold jewellery recovered
Advertisement