செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மண் சரிவில் சிக்கிய கூலித் தொழிலாளி : மீட்கும் பரபரப்பு காட்சி!

10:06 AM Mar 16, 2025 IST | Murugesan M

குடியாத்தம் அரசு மருத்துவமனையின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியின்போது மண் சரிவில் சிக்கிக் கொண்ட கூலி தொழிலாளியை மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertisement

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கம்பி கட்டும் பணியில் ஈடுபட்ட வினோத்குமார் என்ற கூலி தொழிலாளி மண் சரிவில் சிக்கிக் கொண்டார்.

இதனை கண்ட சக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் விரைந்து செயல்பட்டு மண்ணில் புதைந்த வினோத்குமாரை மீட்டனர். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வினோத்குமார் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், மண் சரிவில் சிக்கிக் கொண்ட கூலித் தொழிலாளியை மீட்கும் பதைபதைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Advertisement
Tags :
FEATUREDLaborer trapped in landslide: Exciting rescue scene!MAINகுடியாத்தம்
Advertisement
Next Article