மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்கள் - சீரமைப்பு பணி தீவிரம்!
07:57 AM Mar 21, 2025 IST
|
Ramamoorthy S
வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த வாரம் திடீரென்று பெய்த கனமழையால் உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் உப்பளங்களை தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம் துவங்கிய உப்பு உற்பத்தி 3 முறை பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement