மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா!
12:29 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
கன்னியாகுமரி அருகே அதங்கோடு மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100வது ஆண்டு ரோகிணி விழாவையொட்டி இந்து கடவுள்களின் அலங்கார ரதங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
Advertisement
கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு ஆனந்தநகர் மாயகிருஷ்ண சுவாமி கோயில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணும், அலங்கார வாகனத்தில் ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியும் , ஸ்ரீபுவனேஸ்வரி தேவியும் எழுந்தருளினர். தொடர்ந்து சிவன், பிரம்மா உள்ளிட்ட இந்து கடவுள்களின் அலங்கார ரதங்கள் ஊர்வலம் நடைபெற்றது.
Advertisement
Advertisement