செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சிறப்பு பூஜைகள்!

04:42 PM Dec 23, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணம் அன்று தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ராமநாதசாமி கோயிலில் அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

பின்னர் சுவாமி அம்பாள் படியளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடுத்தெரு, திட்டக்குடி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த சுவாமி- அம்பாள் பக்தர்களுக்கு படியளந்தார்.

Advertisement

நிகழ்வையொட்டி கோயிலுக்கு வருகைதந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
Tags :
MAINrameshwaramSpecial Pujas on the occasion of Ashtami Prathaksan of the month of Margazhi!
Advertisement