முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படும் அரசுப்பேருந்து!
07:26 AM Mar 22, 2025 IST
|
Ramamoorthy S
சேலத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ள நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேட்டூர் - பழனி இடையே இயக்கப்படும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. ஆனாலும், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதாக
போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எந்நேரமும் விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாக கூறியுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement