விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் - நினைவிடத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!
12:52 PM Dec 28, 2024 IST
|
Murugesan M
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்களுக்கான அரசியல்வாதியாக வலம் வந்தவர் விஜயகாந்த் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் மாற்றுசக்தி வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டியவர் விஜயகாந்த் என்றும் புகழாரம் சூட்டினார்.
Advertisement
Advertisement