செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வெகு விமரிசையாக நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம்!

02:12 PM Jan 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வாக நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி விமரிசையாக தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 10-ந் தேதி நடைபெற்ற நிலையில், உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது.

Advertisement

ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா, ரங்கா என கோஷங்கள் எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.

Advertisement
Tags :
MAINNammalvar Mokshamsri rangam templetrichytrichy sri rangam
Advertisement