செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு - இருவர் கைது!

10:02 AM Dec 22, 2024 IST | Murugesan M

வேலூரில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விட்டல் குமார். இவர், வேலூர் மாவட்ட பாஜக ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னாங்குப்பம் பகுதியில் விட்டல் குமார் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ் குமார், கமலதாசன் ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Advertisement

இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் குறித்து அரசிடம் தொடர்ந்து புகார் அளித்ததால் இந்தப் படுகொலை சம்பவத்தை நடத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Tags :
bjpDMK Panchayat President arrest​​​​KV KuppamMAINNagal NagarvelloreVittal Kumar murder case
Advertisement
Next Article