வேலூர் அருகே வாரச்சந்தை ஏலம் - இருதரப்பு மோதல்!
09:39 AM Mar 22, 2025 IST
|
Ramamoorthy S
வேலூர் அருகே வாரச்சந்தைக்கான ஏலம் விடும் போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
Advertisement
குடியாத்தம் அடுத்த பரதராமி கிராமம், ஆந்திரா - தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறுகிறது இதில் வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இதனிடையே பரதராமி சந்தைக்கான ஏலம் விடும் நிகழ்வு குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஏலம் கோருவடு தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement