14 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி மேட்டூரிலிருந்து சென்னை வரை மருத்துவர்கள் பாதயாத்திரை!
04:25 PM Jun 11, 2025 IST | Murugesan M
14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மருத்துவர்கள் பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த பாதயாத்திரையானது சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில் உள்ள மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் நினைவிடத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
Advertisement
இதில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.
Advertisement
மேலும் தங்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement