For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல - மதுரை உயர் நீதிமன்ற கிளை

06:34 AM Feb 05, 2025 IST | Sivasubramanian P
144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல   மதுரை உயர் நீதிமன்ற கிளை

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை விசாரித்த நீதிமன்றம், கால்நடைகளை பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?" என கேள்வி எழுப்பியது.

Advertisement

அதற்கு, 13 வழக்குகள் பதியப்பட்டதாகவும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாற முயன்ற 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாகவே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisement

மேலும், ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏற்கத்தக்கதல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
Advertisement