3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : அதிமுக வெளிநடப்பு!
11:19 AM Apr 16, 2025 IST | Murugesan M
அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குச் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், 3 அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
இதற்குச் சபாநாயகர் அப்பாவு, பிற அலுவல்கள் இருப்பதால், தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
Advertisement