For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

11:08 AM Jun 10, 2025 IST | Murugesan M
3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதே போலத் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜூன் 12ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

இன்றும், நாளையும் தென் தமிழக மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement