செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

NO CALL DROP : HIGH SPEED NET - வியப்பின் உச்சத்தில் கும்பமேளா பக்தர்கள்!

09:00 AM Feb 01, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்ப மேளாவில் எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள தடையற்ற தொலைபேசி வசதி மற்றும் இணைய வசதியும் பெரும் ஆபத்தைத் தடுத்திருக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கடந்த கடந்த 13ம் தேதி கோலாகலத்துடன் தொடங்கியது.

45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா, உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில், புனித நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக் ராஜ் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதுவரை 15 கோடிக்கும் மேலான பக்தர்கள் கும்ப மேளாவில் புனித நீராடியுள்ளனர்.

Advertisement

தை அமாவாசை நாளில், திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.

தடுப்புகளை மீறி பக்தர்கள் புனித நீராட சென்றதே நெரிசலுக்கு காரணம் என தெரிவித்துள்ள கும்பமேளா நிர்வாக அதிகாரி ஆகாங்ஷா ராணா, நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கங்கை நதிக்கரையின் படித்துறைகளுக்கு அருகிலிருக்கும் பக்தர்கள் அங்கிருந்தவாறே புனித நீராடுமாறுமாறு கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் யோகி ஆதித்தியநாத், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்த, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் பிரயாக் ராஜ் பகுதி முழுவதும் 53 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்களும் அனுமதிக்கப்பட்ட கதிரியக்க வரம்புகளுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக மின்காந்த கதிர்வீச்சு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவான எச்சரிக்கை நெறிமுறைகளை வழங்க, ஒலிபரப்பு எச்சரிக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த தளம் தொடங்கப் பட்டுள்ளது. மகா கும்ப மேளா நடக்கும் பகுதி முழுவதும் 26 கிலோமீட்டருக்கு OPTICAL FIBRE போடப்பட்டுள்ளது. கூடுதலாக, 328 புதிய TOWER-கள் நிறுவப்பட்டுள்ளன.

தடையற்ற இணைப்பை உறுதி செய்யும் வகையில், தற்போதுள்ள 1,462 BTS அலகுகளுடன், கூடுதலாக, அனைத்து மொபைல் தொழில்நுட்பங்களிலும் மொத்தம் 575 புதிய BTS பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 92 கிலோமீட்டர் வரை ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OPTICAL FIBRE CABLE ) அதிவேக, நம்பகமான நெட்வொர்க் கவரேஜை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 78 Transportable Towers அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் அதிகமான இடங்களில், தொலை தொடர்பு சேவையை மேம்படுத்த 150 outdoor Small-cell solutions எனப்படும் அமைப்பையும் உருவாக்கி உள்ளனர்.

ஏற்கனவே உள்ள 340 தளங்களை மேம்படுத்தியுள்ள ஏர்டெல் நிறுவனம், புதிதாக 287 புதிய தளங்களை அமைத்துள்ளது. தடையற்ற இணைய சேவையை வழங்குவதற்காக கூடுதலாக 74 கிலோமீட்டருக்கு OPTICAL FIBRE CABLE அமைத்துள்ளது.

மேலும், பல கிலோமீட்டர் பரப்பளவுக்கு 78 active cell on wheels வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைள் மூலம், மகா கும்ப மேளா பகுதியில் மட்டுமின்றி நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், ஹோட்டல்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் தடையற்ற தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் உறுதி செய்கின்றன.

அவசர தகவல் தொடர்புகளுக்காகவும், எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் உடனடி பதிலை உறுதி செய்வதற்காகவும் மூன்று பேரிடர் மேலாண்மை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏதேனும் எதிர்பாராத விபத்து போன்ற சம்பவம் ஏற்படும் நேரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க இந்த தடையற்ற தொலைபேசி பல சிக்கல்களைத் தீர்க்கிறது என்று பிரயாக் ராஜ் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Maha Kumbh Melakumbh mela 2025maha kumbh mela 2025kumbh mela historyprayagraj kumbh mela 2025kumbh mela prayagrajmaha kumbh mela at prayagraj in 2025prayagraj kumbh 2025kumbh mela indiaprayagraj maha kumbh mela 2025kumbh mela 2025 prayagrajMahakumbh Mela 2025NO CALL DROPHIGH SPEED NETMAINkumbhmela high speed internetKumbh Mela
Advertisement